இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 21ஆம் நூற்றாண்டிற்கான புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 34 ஆண்டுகளாக மாற்றப்படாத கல்விக் கொள்கையில் இந்த மாற்றம் முக்கியமாகும். இந்த கல்விக் கொள்கை அனைத்து சமூகத்தினர் மட்டுமின்றி, உலகில் உள்ள கல்வியாளர்களால் வரவேற்கப்படும்” என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய உயர்கல்வி செயலர் அமித் கரே, “இது ஒரு வரலாற்று நாள். 34 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டிற்கு புதிய கல்விக் கொள்கை கிடைத்துள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை மற்றும் சீர்திருத்தங்களைப் பின்பற்றி 2035க்குள் 50 விழுக்காடு மொத்த சேர்க்கை விகிதத்தை அடைவோம்.