தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அடுத்த 5 ஆண்டுகளில் வேலையின்மை ஒழிக்கப்படும் - ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் - Jammu and Kashmir news

ஸ்ரீநகர்: வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஐந்தாண்டுகளில் வேலையின்மை ஒழிக்கப்படும் என ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Sinha
Sinha

By

Published : Oct 31, 2020, 9:13 PM IST

நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்துவருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் வேலையின்மை அளிக்கப்படும் என ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "நாட்டின் பெரிய வணிக நிறுவனங்கள் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டுள்ளன. மாநிலத்தில் வேலையின்மையை முடிவுக்கு கொண்டுவர திட்டம் வகுக்கப்பட்டன. வேலைவாய்ப்புகள் குறித்து இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கவே இன்று மாநாடு நடத்தப்பட்டது.

அரசு ரீதியாக வேலைவாய்ப்புக்கு என கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை ஒழிக்கப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details