இங்கிலாந்தில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகளுடன் இணைந்து கரோனா தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. அதன்படி 30 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை 750 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஈட்டியுள்ளது. இதற்கிடையில், 2020ஆம் ஆண்டு முடிவிற்குள் 400 மில்லியன் (40 கோடி) தடுப்பூசியை தயாரித்து நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கும் வழங்குவோம் எனவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைவர் பாஸ்கல் சொரியட் இதுபற்றி கூறுகையில், “இப்போதே தடுப்பூசிகளை தயாரிக்க தொடங்கி விட வேண்டும். அப்போதுதான் தடுப்பூசி பயனுள்ளது என்பதை நிரூபிக்க முடியும்.