தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆலன், தாஹாவை என்.ஐ.ஏ விசாரிக்கக்கோரும் வழக்கு : 21ஆம் தேதி தீர்ப்பு - தேசிய பாதுகாப்பு முகமை நீதிமன்றம்

திருவனந்தபுரம்: உபா வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள இளைஞர்கள் இருவரை தேசிய பாதுகாப்பு முகமை (NIA) காவலர்கள், காவலில் எடுத்து விசாரிக்க கோரும் வழக்கில் என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் வருகிற 21ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது.

UAPA Case: The verdict in the custody application is on January 21
UAPA Case: The verdict in the custody application is on January 21

By

Published : Jan 18, 2020, 7:33 PM IST

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் கடந்தாண்டு நவம்பர் மாதம் மாவோயிஸ்ட்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆலன் சுகெயிப், தாஹா பாஷல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆலன் சுகெயிப், தாஹா பாஷல் ஆகிய இருவர் மீது உபா வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி, தேசிய பாதுகாப்பு முகமைத் தொடர்ந்த வழக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆலன், தாஹா ஆகிய இருவருக்கும் நீதிமன்ற பிணை அளிப்பது சரியாகாது என நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை வருகிற 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் ஆலன், தாஹா ஆகிய இருவரும் பாதுகாப்பு கருதி திருச்சூர் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இதையும் படிங்க : 'திருமண பந்தத்தில் இணைந்த மாவோயிஸ்ட் காதலர்கள்'

ABOUT THE AUTHOR

...view details