தமிழ்நாடு

tamil nadu

கறுப்பு நிறம் அசிங்கம் எனப் பாடம் நடத்திய 2 ஆசிரியைகள் பணி இடைநீக்கம்!

கொல்கத்தா: மேற்கு வங்க பள்ளி பாடப்புத்தகத்தில் ‘அசிங்கமான’ என்ற வார்த்தையை விளக்குவதற்கு, கறுப்பு நிறம்கொண்ட ஒரு சிறுவனின் படத்தைச் சுட்டிக்காட்டி பாடம் நடத்தியதால் இரு ஆசிரியைகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

By

Published : Jun 13, 2020, 6:35 AM IST

Published : Jun 13, 2020, 6:35 AM IST

Updated : Jun 13, 2020, 12:04 PM IST

ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்
ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்

மேற்கு வங்க அரசு, கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் இரண்டு ஆசிரியைகளை நேற்று பணி இடைநீக்கம் செய்துள்ளது.

ஆங்கில எழுத்துகளைக் கொண்ட பாடப்புத்தகத்தில் "அசிங்கம்" என்ற சொல்லைச் சுட்டிக் காட்டுவதற்காகக் கறுப்பு நிறம்கொண்ட சிறுவனின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதால் கறுப்பின மக்களை இழிவுபடுத்தும் செயல் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் முதற்கட்ட விசாரணையில் "U" என்ற எழுத்திற்கு உதாரணம் கட்ட "UGLY" என எழுதப்பட்டதாகவும் பின்பு "UGLY" என்ற சொல்லுக்கு உதாரணம் வழங்க ஒரு கறுப்பினத்தவரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை: சாதித்துக்காட்டிய இந்திய வம்சாவளி!

Last Updated : Jun 13, 2020, 12:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details