உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷஹர் மாவட்டத்தில் இருக்கும் பகோனா கிராமத்தில் உள்ள கோயிலில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சாதுக்கள் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இருவரும் கோயிலில் நீண்ட காலமாக, தங்கி சேவையில் ஈடுபட்டு வந்தவர்கள்.
இந்தக் கொலை தொடர்பான முதல்கட்ட விசாரணையில், சிவமந்தீரின் நாக்கை திருடிச் சென்ற இளைஞனுக்கு சாதுக்கள் ஆட்சேபனை தெரிவித்ததால், அவர்கள் இருவரும் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகித்த கிராம மக்கள், அந்த இளைஞரை சிறைப்பிடித்து, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.