தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

24 மணி நேரம் காத்திருப்புக்கு பின் பெண் குழந்தை எய்ம்ஸில் அனுமதிப்பு! - hospitals deny admission

டெல்லி: தலையில் பலத்த காயமடைந்த ஒரு பெண் குழந்தை படுக்கைகள் கிடைக்காததால் 24 மணி நேர காத்திருப்புக்கு பிறகு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

AIIMS Hospital Delhi
AIIMS Hospital Delhi

By

Published : Jul 26, 2020, 5:27 PM IST

இதுகுறித்து, குழந்தையின் தாய் கூறுகையில், " குழந்தை குடும்பத்தினருடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மொட்டை மாடியில் இருந்து விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தை நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் சிகிச்சையில் திருப்தி அடையவில்லை. மேல் சிகிச்சைக்காக குழந்தையை எய்ம்ஸுக்கு மாற்ற ஜூலை 23ஆம் தேதி முடிவு செய்தோம்.

நாங்கள் காலை 8 மணியளவில் எய்ம்ஸ் வந்தடைந்தோம், ஆனால் குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க போராடினோம். ஆரம்பத்தில், மேல் சிகிச்சைக்காக சி.டி-ஸ்கேன் செய்யுமாறு மருத்துவமனை கேட்டுக்கொண்டதன்படி எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் மற்றும் பிற சோதனைகளுடன் சி.டி-ஸ்கேன் நடத்தப்பட்டது.

இதையடுத்து, குழந்தைக்கு அவசர நரம்பியல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், படுக்கைகள் கிடைக்காததால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறினர்.

பின்னர் மருத்துவர்கள் குழந்தையை சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பினர், ஆனால் அங்கேயும், படுக்கைகள் கிடைக்காததால் குழந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்டது" என்றார்.

தந்தை அவினாஷ் கூறுகையில், "என் மனைவி ஒரு காணொலியை பதிவு செய்து அதை ஒரு ஊடக நபருக்குக் கொடுத்தார்.

அதன் பிறகு எங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சப்தர்குஞ்ச் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வந்தது இறுதியாக, குழந்தை எய்ம்ஸின் அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 24 ஆம் தேதி இரவு சிறப்பு படுக்கை வழங்கப்பட்டது” என்றார்.

இதையும் படிங்க:கரோனாவிலிருந்து திரும்பினேன் ஆனால் வீடு திரும்ப முடியவில்லை… மகனால் பரிதவிக்கும் தாய்

ABOUT THE AUTHOR

...view details