தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சுற்றிய ராணுவ வீரர், இரண்டு பெண்கள் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

காஷ்மீர்: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிய ராணுவ வீரர் மற்றும் இரண்டு பெண்கள் என மூவரும் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

By

Published : Sep 25, 2020, 7:22 AM IST

rr
rr

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிய ராணுவ வீரர் மற்றும் இரண்டு பெண்களை தடுத்து நிறுத்திய சுற்றுலா காவல் துறையினர், மூவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்நபர் பிகார் படைப்பிரிவின் சிப்பாய் ரோஷன் குமார் என்பதும் அவருடன் இருந்த இரண்டு பெண்களும் தீத்வால் குப்வாராவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்த ராணுவ வீரரும் தீத்வால் பகுதியில்தான் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். இவர்கள் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டிருந்தாகவும் கூறப்படுகிறது.

கிடைத்த தகவலின்படி, டிக்கெட் இல்லாமல் சுற்றிய காரணத்திற்காகவே இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இது பெரிய பிரச்னை இல்லை என காவல் துறை அலுவலர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, செப் 12இல், இரண்டு பெண்களுடன் ராணுவ வீரர் ஒருவர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details