தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாத்தான்குளம் தந்தை-மகன் உடற்கூறாய்வு அறிக்கை சமர்ப்பிப்பு!

மதுரை: சாத்தான்குளத்தில் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் மரணித்த தந்தை- மகனின் உடற்கூறாய்வு அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் சமர்ப்பிக்கப்பட்டது.

By

Published : Jun 30, 2020, 12:45 PM IST

Tuticorin Deaths Tuticorin Custodial Deaths Tuticorin case Tuticorin father son Death Autopsy Report Sathankulam News சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் சாத்தான்குளம் லாக்அப் மரணம் உடற்கூறாய்வு அறிக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
Tuticorin Deaths Tuticorin Custodial Deaths Tuticorin case Tuticorin father son Death Autopsy Report Sathankulam News சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் சாத்தான்குளம் லாக்அப் மரணம் உடற்கூறாய்வு அறிக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

சாத்தான்குளத்தில் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை-மகன் சிறையில் அடைக்கப்பட்டு, மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்திவருகிறார். இந்நிலையில், நீதித்துறை நடுவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குமார், காவல் துணைகண்காணிப்பாளர் பிராதபன் ஆகியோரை இன்று நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதித்துறை நடுவரை ஒருமையில், மரியாதைக் குறைவாக, ஏளனமாகப் பேசியதாக காவலர் மகாராஜனை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். மூவர் மீதும் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக தாக்கல் செய்தது.

நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது மூவரும் நேரில் ஆஜராகினர். நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, நெல்லை சரக ஐஜி பிரவீன் குமார், தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் ஆகியோர் அரசு வழக்குரைஞருடன் வந்திருந்தனர்.

அரசுத்தரப்பில் நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காத குமார், பிரதாபன் ஆகியோர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதித்துறை நடுவரை மரியாதைக்குறைவாகப் பேசிய காவலர் மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த 24 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

நீதிபதிகள், நீதித்துறை நடுவரின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் மீதான நீதிமன்ற குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை தொடரும். தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்தனர். அரசுத்தரப்பில் அவர்கள் செய்தது தவறு இருப்பினும், அதிக மன அழுத்தம் காரணமாகவே நிகழ்வு நடைபெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், நீதித்துறை நடுவர் தான் விசாரிக்கிறார் என்பது தெரியுமா? தெரிந்தும் ஏன் இவ்வாறு பிரச்னையை பெரிதுபடுத்தும்விதமாகவே நடந்துகொண்டனர் எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, மூவர் தரப்பிலும் வழக்குரைஞர்களை நியமிக்க உத்தரவிட்டு நான்கு வாரங்கள் அவகாசம் அளித்து, இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்ந்து சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் வரை நெல்லை சரக டிஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? என கேள்வி எழுப்பினர். சிபிஐ பலவித அனுமதிகளைப் பெற்று விசாரணை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து காவல்துறையினரும் மோசமானவர்கள் அல்ல.

ஒரு சிலரின் நடவடிக்கைகளால் இது போன்ற பிம்பம் ஏற்பட்டுவிடுகிறது என தெரிவித்த நீதிபதிகள் முதல்நிலை உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அதனடிப்படையில் அதிக காயங்கள் இருப்பதும், வழக்கு பதிவு செய்யவும் முகாந்திரம் உள்ளது.

நீதித்துறை நடுவரின் அறிக்கையில் காவலர் ரேவதி சாட்சி அளிக்கையில் மிகவும் அச்சமடைந்து காணப்பட்டுள்ளார். ஆகவே அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

ஆகவே, ஒரு நொடி கூட வீணாகக்கூடாது. ஆகவே, சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் வரை நெல்லை சரக டிஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? அல்லது நெல்லை சிபிசிஐடி உடனடியாக வழக்கு விசாரணையை கையில் எடுக்க இயலுமா? என்பது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் சிசிடிவி காட்சி: முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டவை பொய்!

ABOUT THE AUTHOR

...view details