தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வனப்பகுதியில் குதறப்பட்ட நிலையில் கிடந்த இளைஞர் - forest near Pulpally

வயநாடு: புல் பள்ளி அருகிலுள்ள காட்டில் காணாமல் போன பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

killed
killed

By

Published : Jun 17, 2020, 7:39 PM IST

Updated : Jun 17, 2020, 7:59 PM IST

கேரள மாநிலம் வயநாடு அருகேயுள்ள காட்டுநாயக்கர் காலனியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் சிவக்குமார் (24). நேற்று (செவ்வாய்) மாலை வீட்டை விட்டு சென்றவர் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இளைஞர் வசிக்கும் பகுதி அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் காவல்துறையினர் வனத்துறையின் உதவியுடன் காணாமல் போன இளைஞரை வலைவீசி தேடினர். இந்நிலையில், புல் பள்ளி அருகிலுள்ள காட்டில் காணாமல் போன இளைஞர் சிவக்குமார் தலை மற்றும் பாதி கால்களுடன் சதையில்லாமல் எலும்புக்கூடாக கிடந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் உடனடியாக சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சடலமாக மீட்கப்பட்ட இளைஞரை புலி அடித்து கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:லடாக் பிரச்னை: சர்ச்சைக்குரிய ட்வீட் செய்த சிஎஸ்கே மருத்துவர் சஸ்பெண்ட்!

Last Updated : Jun 17, 2020, 7:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details