சுபாஷ் சந்திர போஸின் 122ஆவது பிறந்த நாள், நாடு முழுவதும் இன்று கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோக் பெங்களூருவிலுள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சட்டத்தின் முன் அனைவரும் சமம். திருடன் எப்போதும் திருடன்தான். தேசத்துக்கு எதிராக குற்றத்தை செய்தவன் எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் இங்கு தண்டிக்கப்பட வேண்டும்.