தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா வைரஸ்: புதுமையான முறையில் விழிப்புணர்வு - புதுச்சேரி போக்குவரத்து காவலர்களின் விழப்புணர்வு

புதுச்சேரி: கோவிட் -19 வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, கைகளை கழுவி சுத்தமாக எப்படி இருக்க வேண்டும் என்பதை புதுச்சேரியில் போக்குவரத்து காவலர்கள் சிக்னலில் நின்று வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Traffic police created awareness in a unique way to deal with covid -19 virus outbreak
Traffic police created awareness in a unique way to deal with covid -19 virus outbreak

By

Published : Mar 21, 2020, 7:06 PM IST

இந்தியாவில் கோவிட் -19 தொற்று நோயால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 298ஆக உயர்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில், புதுச்சேரியில் அரசு சார்பில் கரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திவருகிறது. அந்தவகையில், அம்மாநில போக்குவரத்து காவல் துறையின்ர் அண்ணாசாலை சிக்னல் அருகே புதுமையான முறையில் வாகன ஓட்டிகளுக்கு விழப்புணர்வை ஏற்படுத்தினர்.

வாகன ஓட்டிகளுக்கு புதுமையான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவலர்!

போக்குவரத்து காவலர் ஜெயராம் தலைமையில் காவலர்கள் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு முன்பு நின்று, 30 வினாடிகளுக்கு கைகளை கழுவும் முறை குறித்தும், கைகளை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்தும் செய்முறை விளக்கம் செய்து, வாகன ஓட்டிகளை கவர்ந்தனர். இதையடுத்து, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க:புதுச்சேரியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட முகக்கவசங்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details