புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட ஏ.எப்.டி. மில் காலப்போக்கில் நிர்வாக சீர்கேடு, முறைகேடுகள் போன்ற காரணங்களால் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்தது. அதன்காரணமாக மில்லை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அதனை நவீனப்படுத்தி இயக்கவேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துவந்தன.
இந்நிலையில் ஏ.எப்.டி. மில் ஆலை மூடப்படப்போவதாக, அதன் மேலாண் இயக்குனர் தொழில் துறை செயலருக்கு கடிதம் அனுப்பினார். அதைத்தொடர்ந்து மில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த அறிவிப்பை திரும்ப பெறக்கோரி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் ஆகியோர் தலைமையில் தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் நாராயணசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.