ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் 61 பேர் படகில் பயணம் மேற்கொண்டனர். அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்றதால் பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து 30 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து! - கிழக்க கோதாவரி மாவட்டம்
அமராவதி: கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் பயணித்த 61 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
![ஆந்திர மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4447518-thumbnail-3x2-boat.jpg)
படகு
ஆந்திர மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து!
இந்நிலையில் படகில் பயணித்த 61 பேரில் 17 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர், ஒருவர் உயிரிழந்துள்ளார். மீதமுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு படையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
ஹேலிகாப்டர் மூலமாக மீட்பு பணி
Last Updated : Sep 15, 2019, 6:32 PM IST