கரோனா வைரசின் தாக்கம் நாட்டில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில் ஒவ்வொரு நாளும் பாதிப்பின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
அந்த வகையில், இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நாட்டில் 1071 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி,
- சிகிச்சையில் இருப்போர் - 942
- குணமடைந்தோர் - 100
- இறந்தோர் - 29"