தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 11, 2019, 3:09 PM IST

ETV Bharat / bharat

காஷ்மீரில் குழந்தையை சுட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர்: லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த முக்கிய பயங்கவாதி ஒருவரை ஜம்மு-காஷ்மீரில் சுட்டுவீழ்த்தியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

terrorists


சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில், இரண்டு வயது குழந்தை உள்பட ஒரு குடும்பத்தையே பயங்கரவாதிகள் தாக்கினர். இதில், குண்டடிபட்ட குழந்தை ஆபத்தான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதியான அஸிஃப் இன்று சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details