இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் நமக்கு தெரிவிக்கின்றன. அதனால் அதனைப் பேணிக்காக்க அரசு மட்டுமின்றி திரை பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க மாநிலத் தலைநகரமான கொல்கத்தாவைச் சேர்ந்த ரதின்த்ரா தாஸ், அவர் மனைவி கீதாஞ்சலி ஆகியோர் புலிகளைக் காப்பது குறித்தான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்ததங்களின் பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்து பிப்ரவரி 15ஆம் தேதி பயணத்தைத் தொடங்கினர். தங்களின் இந்த சுற்றுப்பயணத்திற்கு “ஜர்னி ஃபார் டைகர்” என்று பெயர் வைத்துள்ளனர்.