புதுச்சேரி ரயில்வே நிலையத்தில் வெளிமாநில ரயில்வே போக்குவரத்து அதிகரித்து வருவதால் வெளிமாநில பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதினால் தீவிர கண்காணிப்பில் முக்கிய கவனம் செலுத்துவது மேலும் குற்றச்செயல்களை தடுப்பது குறித்து ரயில்வே காவலர்களுடன் புதுச்சேரி காவல்துறையினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காவல்துறை கண்காணிப்பாளர் மாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் புதுச்சேரியில் ரயில் வழியாக எளிதில் நுழையாமல் இருக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது, வெளி மாநிலத்து பிச்சைக்காரர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை ரயில் மூலம் புதுச்சேரிக்கு அனுப்பிவிடுவதை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.