தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மோடியின் ஐந்தாண்டு ஆட்சிக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கலாம்' - நாராயணசாமி

புதுச்சேரி: "சிபிஐ வைத்துக்கொண்டு மாநில அரசுகளை மிரட்டி வரும் மோடியின் ஆட்சிக்கு பூஜ்யம் மதிப்பெண் வழங்கலாம்" என்று, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி

By

Published : Mar 24, 2019, 10:56 PM IST

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இந்நிலையில், இவருக்கு ஆதரவாக கனக செட்டிகுளம் பகுதியில் இன்று மாலை துவங்கிய பரப்புரை கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார். பரப்புரை வேனில் வேட்பாளர் வைத்திலிங்கத்துடன் வலம் வந்த முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பரப்புரைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, "கிரண் பேடி, மோடி, ரங்கசாமி ஆகியோரால் புதுச்சேரி வளர்ச்சி பாதையை எட்டவில்லை பின்தங்கி கிடக்கிறது. சிபிஐ-யை வைத்துக்கொண்டு மாநில அரசுகளை மோடி மிரட்டி வருகிறார். மோடியின் ஐந்தாண்டு ஆட்சி சாதனை அல்ல.. மக்களுக்கு வேதனைதான் அளித்துள்ளது. இதற்கு பூஜ்ஜியம் மதிப்பு போடலாம். பாஜக, அதிமுக, என்ஆர் காங்கிரஸ் ஆகியன சந்தர்ப்பவாத கூட்டணி. காங்கிரஸ் கூட்டணிதான் கொள்கை கூட்டணி" என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details