தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 29, 2020, 6:15 AM IST

ETV Bharat / bharat

அனந்த்நாக்கில் என்கவுன்ட்டர்: வீழ்த்தப்பட்ட 3 பயங்கரவாதிகள்!

ஜம்மு காஷ்மீர்: அனந்த்நாக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

terrorists killed
terrorists killed

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கின் குல்சோஹர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்தச் சண்டையில் பயங்கரவாதிகள் மூவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும், மறைந்திருக்கும் பயங்கரவாதிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. சம்பவம் நிழ்ந்த அப்பகுதியில் காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஜூன் 26ஆம் தேதி ட்ரால் பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். செவா உல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் உலவுவதாக காவல் துறையினரிடமிருந்து வந்த தகவலையடுத்து, இந்த என்கவுன்ட்டர் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புல்வாமாவில் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details