காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வன்முறைகள், கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகப் பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், சோபியான் மாவட்டத்தில் பிரிவினைவாதிகள்-பாதுகாப்புப் படையினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் சிக்கி ஒரு பிரிவினைவாதி உயிரிழந்துள்ளார். ஆயுதங்கள் ஏந்திய இரண்டு பிரிவினைவாதிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.