தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரஃபேல் விமான தளத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ரஃபேல் விமான தளம்

சண்டிகர்: ஹரியானாவில் உள்ள ரஃபேல் விமான தளத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஃபேல் விமான தளம்
ரஃபேல் விமான தளம்

By

Published : Aug 22, 2020, 5:49 PM IST

பிரெஞ்சு தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷனிடமிருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் நோக்கில் இந்தியா 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஐந்து ரஃபேல் விமானங்கள் ஹரியானா மாநிலம் அம்பாலா வந்தடைந்தது.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள ரஃபேல் விமான தளத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை திட்டமிட்டது ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ் வைஷ்யா என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பின்னணியில், முன்னாள் ராணுவ வீரர், காவல் துறை உயர்மட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் இருக்கின்றனர் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் பொய்யானதாக இருக்கலாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 1A அருகே ரஃபேல் விமான தளம் அமைந்துள்ளது. அதை சுற்றி பல கிராமங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'அரசின் பணம் திருடப்பட்டுள்ளது'- ரஃபேல் குறித்து ராகுல்!

ABOUT THE AUTHOR

...view details