தமிழ்நாடு

tamil nadu

ஒற்றுமையை உணர்த்தும் தினம் இது : மோடி

டெல்லி : சர்வதேச யோகா தினம் உலக ஒற்றுமையையும் தோழமையையும் உணர்த்துவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

By

Published : Jun 21, 2020, 12:09 PM IST

Published : Jun 21, 2020, 12:09 PM IST

pm modi
pm modi

6ஆவது சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று காலை காணொலி மூலம் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, "மனித சமூகத்தில் ஒற்றுமையையும் தோழமையையும் வளர்க்கும் சக்தியாக யோகா உருவெடுத்துள்ளது. இனம், நிறம், பாலினம், மதம், தேசங்களைக் கடந்து அனைவருக்கும் சொந்தமானது இது. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சமூகமாக நாம் மாற யோகா உறுதுணையாக இருக்கும்.

சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளப் பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி செய்வதே சிறந்த வழி. ஒரே சமூகமாக, குடும்பமாக ஒற்றுமையுடன் பயணிப்போம். யோகாவை வாழ்க்கையின் ஒரு அங்கமாக்கிக் கொள்ளுங்கள்" என்றார்.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா பாதுகாப்புப் படையினர் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கர மோதலை அடுத்து மோடி இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கல்வான் பள்ளதாக்கு: உரிமை கோரும் சீனா, நிராகரித்த இந்தியா

ABOUT THE AUTHOR

...view details