அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம். மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு குடும்பம், தனிநபர்களின் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணி ஏப்ரல் 1 முதல் ஆறு மாதங்கள் நடைபெற்று, என்பிஆர்( National Population Register) புதுப்பித்தல் பணிகள் நிறைவு பெறும் என மத்திய அரசு முன்னதாக அறிவித்தது.