சீனாவில் தோன்றி உலகையே மிரட்டி வரும் கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 84க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
இந்தக் குழப்பமான சூழலில் கோவிட்-19 வைரஸ் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ரந்தீப் குலேரியா நம்மிடையே விளக்கமளித்துள்ளார். ஈடிவி பாரத்துக்கு அவர் அளித்த பிரத்யேகப் போட்டியில், "யாரும் பயப்பட வேண்டாம். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே இதுவரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் நிலைமை மோசமாக இல்லை.
இந்த நோய்க்கு குறிப்பிடும்படியான அறிகுறிகள் ஏதும் இல்லை. சளி, காய்ச்சல், வறட்சியான தொண்டை, இருமல், உடல் வலி உள்ளிட்டவை ஜலதோஷம் உள்ளிட்ட நோய்களாலும் வரக்கூடும். ஆனால், கடந்த 14 நாள்களில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு அதிகமாகப் பரவியுள்ள பகுதிக்குச் சென்றிருந்தாலோ, அல்லது அந்த வைரஸால் பாதிக்கப்பட்டோருடன் அருகில் சென்றிருந்தாலோ மட்டுமே நீங்கள் கவலைப்பட வேண்டும். உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.