தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 8, 2020, 10:16 PM IST

ETV Bharat / bharat

‘கெஜ்ரிவால் ஒரு மோசக்காரர்’ - டெல்லி காங்கிரஸ் மூத்தத் தலைவர் சஞ்சய் தீக்ஷித் தாக்கு

டெல்லி: சட்டப்பேரவைத் தேர்தல் பெரும் பரபரப்புகளுக்கிடையே இன்று நிறைவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் சஞ்சய் தீக்ஷித் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் தமிழாக்கம் இதோ...

AAP
AAP

மூன்று முறை முதலமைச்சராக இருந்த உங்கள் தாயார் ஷீலா தீக்ஷிதுக்குப் பின், சில காலம் உங்களைத் தீவிர அரசியலில் பார்க்க முடியவில்லையே ஏன்?

சில காலம் நான் டெல்லி காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டது உண்மைதான். அதுகுறித்து இப்போது பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அதேவேலை, காங்கிரசில் தலைமை பொறுப்புக்கான சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. இதன் காரணமாகவே நான் கடந்த ஐந்து வருடங்களாக ஒதுங்கியிருந்தேன். ஷீலா தீக்ஷித் அவர்கள் மாநிலத் தலைவராக வந்தபோது, நான் அவருக்கு உதவிகரமாக இருந்தேன். அதன்பின்னர், காங்கிரஸ் வளர்ச்சிக்கு என்னுடைய பொதுப்பணியை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறேன்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தைக்கூட கைப்பற்றவில்லை. இம்முறையும் கட்சியின் நம்பிக்கையுடன் களத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன?

கடந்த சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கட்சிக்குப் பின்னடைவைத் தந்தது உண்மைதான். அதேவேலை 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எங்களின் செயல்பாடுகள் முன்னேற்றத்தைத் தந்துள்ளது. ஷீலா தீக்ஷித்தின் மறைவு கட்சிக்கு பேரிழப்பு. இரு பெரும் சவால்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். ஆம் ஆத்மி, பாஜக கட்சிகளைப் போல் எங்களுக்கு பலம் இல்லை.

ஆம் ஆத்மி கட்சி சுமாரான ஆட்சியைத் தந்துவிட்டு, ஊடகங்களில் பொய் பரப்புரைகளை மேற்கொண்டுவருகின்றன. முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் சிசோடியா இருவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்தியது போல் கருத்து பரப்பிவருகின்றனர். ஷீலா தீக்ஷித் ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வி, போக்குவரத்து ஆகியவை சிறப்பாக செயல்பட்டுவந்தது என்பதே உண்மை.

இருப்பினும் காங்கிரஸ் பரப்புரை கவர்ச்சியற்றுக் காணப்படுவது ஏன்?

நாங்கள் ஊடக விளம்பர வெளிச்சத்தை பெரிதும் விரும்பவில்லை. ஷீலா தீக்ஷித் தலைமையிலான ஆட்சியின்போது பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரத்தை ஒருபோதும் தந்ததில்லை. அதேவேலை, கெஜ்ரிவல் அரசு இரண்டு நாளைக்கு ஒரு முறை, அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தி பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துவருகிறது. காங்கிரஸ் தங்களின் தொண்டர்கள் மூலம் மக்களை எதிர்கொள்கிறது. ஊடக வெளிச்சம் ஆம் ஆத்மிக்கு அதிகம் இருப்பதால் எங்கள் பரப்புரை வெளிப்படவில்லை.

காங்கிரஸ் தனது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காதது ஏன்?

காங்கிரஸ் தனது முதலமைச்சர் வேட்பாளரை ஒருபோதும் அறிவித்தது இல்லை. காங்கிரஸ் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே பின்பற்றும் கட்சி, அதிபர் முறையிலான தேர்தலில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை. கடந்த 2003, 2008ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் கூட ஷீலா தீக்ஷித் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை.

கெஜ்ரிவால் மென்மையான இந்துத்துவா அரசியலை கையாளும் நிலையில், காங்கிரஸ் பாஜக, ஆம் ஆத்மி இருவரில் யாரைத் தேர்தலில் பிரதான எதிரியாகப் பார்க்கிறது?

கெஜ்ரிவால் ஒரு மோசக்காரர், ஆடு உருவில் இருக்கும் ஒரு ஓநாய். ஆர்.எஸ்.எஸ். கைகூலியான கெஜ்ரிவால் மக்கள் மத்தியில் போலி வேடத்தில் தன்னை காட்டிவருகிறார். அதிகார வெறி பிடித்த அவர் பாஜகவின் கையாள். ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே நடத்திய போராட்டத்தின்போது, அன்றைய பாஜக மூத்தத் தலைவர்களான அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரின் மடியில் தவழ்ந்தவர் கேஜ்ரிவால்.

தற்போது அவர், பகவத் கீதை படிப்பதாகவும், ஹனுமன் சாலீசா படிப்பதாகவும் கூறிவருகிறார். மத நூல்கள் படிப்பதில் தவறல்ல. அதேவேலை, தன்னை பாஜக போன்று ஹிந்துத்துவவாதி என பிம்பப்படுத்திக்கொள்வது தவறான யுக்தி. நான் நல்ல மனிதர் ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என விரும்புகிறேன். மதசார்பின்மை கருத்துக்கு எதிராக இந்திய அரசியல் அமைப்பை மீறி நடக்கும் கெஜ்ரிவால் ஒரு மோசக்கார் என்பதே என் கருத்து.

குடியுரிமை திருத்தச் சட்டம் டெல்லி தேர்தலில் எத்தகைய தாக்தத்தை ஏற்படுத்தும்?

தேசிய பிரச்னையான இதில் காங்கிரஸ் மட்டுமே ஆரம்பத்திலிருந்து உறுதியான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி மட்டுமே எடுத்துள்ளது. டெல்லி முதலமைச்சர் சிஏஏவுக்கு எதிராகக் கருத்து கூறினாலும் என்.ஆர்.சி, என்.பி.ஆர் குறித்து கருத்து தெரிவிக்க மறுப்புத் தெரிவிக்கிறார். மேலும் தன்னிடம் காவல்துறையின் கட்டுப்பாடு இருக்கும்பட்சத்தில், ஷாஹீன் பாக் போராட்டக்களத்தை இரண்டே மணிநேரத்தில் காலிசெய்யப்படும் எனத் தெரிவித்தார். சொல்லப்போனால் மத்திய அரசு போராட்டக்காரர்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் செய்யாத நிலையில், பாஜக தலைவர் பர்வேஷ் வர்மா போன்று கேஜ்ரிவால் பேசிவருகிறார்.

தேசிய அளவில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

ஜனநாயக ரீதியாக பரந்த அமைப்பை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையில் காங்கிரஸ் செயல்படுகிறது. மறுகட்டமைப்பு பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுவருகிறது.

மோடி அரசின் அனைத்து திட்டங்களும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களே. மோடி அரசு எந்தவொரு திட்டத்தின் உரிமையையும் மோடி அரசு உரிமை கொண்டாட முடியாது. இந்துத்துவ தேசியவாத பிம்பத்தை மட்டுமே பாஜக கொண்டுள்ளது. இஸ்லாமியர்கள் மக்களை துண்டாடும் நோக்கில் செயல்படும் பாஜகவை தீவிரத்துடன் எதிர்க்க காங்கிரஸ் தன்னை தகவமைத்துக் கொள்ளும்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் சஞ்சய் தீக்ஷித் பேட்டி

இதையும் படிங்க: 'எங்கேயும் காதல்' - சாதி, மதம், மொழி, நாடு கடந்து வென்ற தமிழரின் காதல்

ABOUT THE AUTHOR

...view details