தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாளை திறக்கப்படும் தேங்காய்த்திட்டு துறைமுகம் - தேங்காய்த்திட்டு துறைமுகம்

புதுச்சேரி: மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றதையடுத்து நாளை விடியற்காலையில் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் மொத்த வியாபாரிகள் மீன் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Thengaaithittu harbour resumes tomorrow
Thengaaithittu harbour resumes tomorrow

By

Published : Jun 5, 2020, 7:43 PM IST

நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தொடர்ந்து ஏப்ரல் 14ஆம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் என்பதால் மீனவர்கள் நீண்ட நாள்களாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசு மீன்பிடி தடை காலத்தை குறைத்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், படகுகள் பழுது நீக்கம் மற்றும் சரி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதால் ஒன்றாம் தேதி புதுச்சேரி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இச்சூழலில் இன்று முதல் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டதையடுத்து மீனவர்கள் இன்று காலை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். புதுச்சேரியில் 75 நாள்களுக்கு பிறகு மீன்பிடி தொழில் தொடங்கியது. குறைந்த அளவிலேயே படகுகள் கடலுக்குள் சென்றுள்ளன. விசைப்படகுகள் இன்று இரவு முதல் கடலுக்குள் செல்ல உள்ளன.

இதனையடுத்து, நாளை அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணிவரை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் மொத்த விற்பனை நடைபெறும் என்றும் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து மக்கள் மீன்களை வாங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details