தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரிசி வழங்கக்கோரி மார்ச் 5ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்ட தீர்மானம் - புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரி: ரேஷன் கடைகளில் அரிசி வழங்க வலியுறுத்தி மார்ச் 5ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

pudhucherry
pudhucherry

By

Published : Feb 25, 2020, 4:40 PM IST

புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிரதேச செயலர் ராஜாங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அனிபால்கென்னடி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணபிரான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சோ. பாலசுப்ரமணியம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தேவபொழிலன், புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் சிவ. வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அனைத்துக் கட்சி கூட்டம்
அதில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பல்கலைக்கழகக் கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும். இலவசப் பேருந்து வசதியை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக அதில், ஏப்ரல் 28ஆம் தேதி அன்று பல்கலைக்கழக வளாகம் முன்பு அனைத்துக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் ரேஷன் கடைகளில் அரிசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மார்ச் இரண்டாம் தேதி புதுச்சேரி முழுவதும் பரப்புரை இயக்கம் நடத்தி, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, மார்ச் 5ஆம் தேதி அதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details