தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 27, 2020, 11:22 PM IST

ETV Bharat / bharat

கார்கில் போரில் இந்தியாவுக்குச் சாதகமாக மாறிய காரணிகள்!

முக்கியமான சிகரங்களை மீண்டும் கைப்பற்ற இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள், போரின் போக்கு இந்தியாவிற்குச் சாதகமாக மாறியது ஆகியவை பற்றிய தொகுப்பு...

கார்கில்
கார்கில்

டிராஸ் பகுதியில்டோலோலிங் ஒரு திருப்புமுனை

டோலோலிங்கின் முக்கியத்துவம்: டிராஸ் பகுதியிலிருந்து 5 கிமீ தூரத்தில் அமைந்துள்ள டோலொலிங்கை எதிரிகள் ஆக்கிரமித்து, ஸ்ரீநகர்-கார்கில்-லே நெடுஞ்சாலையில் ஆதிக்கம் செலுத்தினர். இந்தப் பகுதி பாகிஸ்தான் படையினர் ஆழமாக வேரூன்றி ஊடுருவிய இடமாகும். மூன்று வாரங்கள் தீவிரமான சண்டைக்குப் பின்னர் டோலோலிங்கை கைப்பற்றியது மோதலின் திருப்புமுனைகளில் ஒன்றாகும். நாகா, கர்வால், கிரெனேடியர் பட்டாலியன்களின் ஆரம்ப முயற்சிகள் தோல்வியுற்ற பின்னர், கூடுதல் பீரங்கிகள் சேர்க்கப்பட்டு புதிய பட்டாலியன், 2 ராஜ் ரைபிள்ஸ் ஆகியவை கொண்டுவரப்பட்டது.

போரின் கதை

  • 2 ராஜ்புதன ரைபிள்ஸ் தாக்குதல் மேஜர் விவேக் குப்தா தலைமையிலான சி படைப்பிரிவு மற்றும் மேஜர் மோஹித் சக்சேனாவின் கீழ் டி படைப்பிரிவு ஆகியவை இந்தத் தாக்குதலுக்காகப் புறப்பட்டன.
  • மற்ற இரண்டு படைப்பிரிவுகளும் தாக்குதல் தளங்களாக நிறுவப்பட்டு, தாக்குதலுக்கான இருப்புக்களாகப் பரிந்துரைக்கப்பட்டன
  • டி படைப்பிரிவு அதன் இலக்கான பாயிண்ட் 4,590ஐ நோக்கி தென்மேற்கு திசையில் முதலில் சென்றது.
  • குறைந்த தூரத்தில் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்ட போதிலும், படைப்பிரிவு முன்னேறக்கூடிய ஒரு பாதுகாப்பான நிலை அமைப்பதில் வெற்றிபெற்றது. இந்நிலையில், சி படைப்பிரிவின் தாக்குதல் தொடங்கப்பட்டது.
  • பிந்தைய டோலோலிங் உச்சியை நோக்கி நெருங்கியது. விவேக் குப்தாவே ரிசர்வ் படைப்பிரிவை டோலோலிங் உச்சியை அடைவதற்கு வழிவகுத்தார்.
  • கடுமையான காயங்களுக்கு ஆளான போதிலும், விவேக் குப்தா தொடர்ந்து தனது ஆட்களை அங்கிருந்து எதிரிகளை வெளியேற்றுவதற்காக வழிநடத்தினார்.
  • இந்த முக்கியமான கட்டத்தில், இளம் பீரங்கி கண்காணிப்பு அதிகாரியான கேப்டன் மிருதுல் குமார் சிங் படைப்பிரிவினரை அணிதிரட்டி, எதிர்பாராத எதிர் தாக்குதல்களைத் தடுக்கும் நோக்கில் அவர்களை நிறுத்தினார்.
  • பாகிஸ்தானியர்கள் ஒரு பழிவாங்கும் நோக்குடன் எதிர்வினையாற்றினர். டோலோலிங் டாப்பின் இழப்பு அவர்களுக்கு ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது. அவர்களால் தொடங்கப்பட்ட எதிர் தாக்குதல்கள் சி படைப்பிரிவால் மீண்டும் தாக்கப்பட்டன.
  • 2 ராஜ்புதன ரைபிள்ஸின் கமாண்டிங் அதிகாரி, லெப்டினன்ட் கர்னல் எம்.பி. ரவீந்திரநாத், பின்னர் மேஜர் பி. ஆச்சார்யாவின் கீழ் ஏ படைப்பிரிவைத் தொடங்கி பாயிண்ட் 4590இன் மீதமுள்ள பகுதிகளையும் கைப்பற்றினார்.
  • டோலோலிங் டாப்பில் நமது சொந்த துருப்புக்களுக்கு மிக அருகில் இருந்தபோதிலும், சரியான பீரங்கி தாக்குதல்கள் மூலம் இலக்குகள் வீழ்த்தப்பட்டன. அதேசமயம், டோலோலிங்கின் வடக்கே உள்ள சரிவுப் பாதைகளைக் கைப்பற்ற பி படைப்பிரிவு பணிக்கப்பட்டது.
  • ஜூன் 13ஆம் தேதியன்று, 2 ராஜ்புதன ரைபிள்ஸ் டோலோலிங்கை இறுதியாக கைப்பற்ற முடிந்தது.

இந்தக் கடினமான, முக்கியமான போரில், சுபேதார் பன்வர் லால், படைப்பிரிவு ஹவில்தார் மேஜர் யஷ்வீர் சிங், ஹவில்தார் சுல்தான் சிங், நர்வாரியா, நாயக் திகேந்திர சிங் ஆகியோர் அசாத்தியமான துணிச்சலைக் காட்டினர். ஹம்ப் மற்றும் டோலோலிங்கிற்கு இடையில் ஒரு தடுப்பை நிறுவது, எதிரிகளின் படை வலுவூட்டல்கள் எந்தவொரு இடத்தையும் அடைவதைத் தடுப்பது என கமாண்டோ படைப்பிரிவில் பணிபுரிந்த கேப்டன் என். கென்குருஸ் ஒரு பெரிய பங்களிப்பை வழங்கினார்.

டைகர் ஹில்

  • டைகர் ஹில் அதன் அருகிலுள்ள மற்ற எல்லா மலைகளின் கம்பீரத்தைக் குறைக்கிறது. ஸ்ரீநகர்-கார்கில்-லே நெடுஞ்சாலையிலிருந்து வடக்கே கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தாலும், இந்த மலை உச்சியில் உள்ள எதிரி நிலைகள் இந்த நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. டோலோலிங் மற்றும் அருகிலுள்ள நிலைகளை மீண்டும் கைப்பற்றிய பின்னர், இந்தப் பாதுகாப்பான நிலையிலிருந்து எதிரிகளை வெளியேற்றுவது என்பது முன்னுரிமையாக மாறியது.
  • டிராஸ் பகுதியில் மிக உயர்ந்த அம்சமான டைகர் ஹில், மோதலின் உச்சம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. இது ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் ஆதிக்கம் செலுத்தி எதிரிகளுக்கு ஒரு பரந்த அளவிலான பீரங்கி தாக்குதலை இயக்க உதவியது. இந்தச் சிகரத்தைக் கைப்பற்ற, 192 மலைப் படை அணியின் தளபதி பிரிகேடியர் M.P.S. பஜ்வா, 18 கிரெனேடியர்கள், 8 சீக்கியர் பட்டாளம் மற்றும் 2 நாகா பட்டாளம் ஆகியோருக்கு பீரங்கி உதவியுடன் பணியை வழங்கினார்.
  • ஜூலை 3ஆம் தேதி தாக்குதல் நடந்த நாளில், கிட்டத்தட்ட 120 கள மற்றும் நடுத்தர துப்பாக்கிகள், 122-மிமீ மல்டிபாரல் கிராட் ராக்கெட்டு ஏவுகணைகள் மற்றும் சிறிய பீரங்கிகள் டைகர் ஹில்லில் எதிரிகள் மீது பொழிந்து, அவர்களை வீழ்த்தின.
  • ஜூலை 2-3 ஆகிய தேதிகளில் விமானப்படை டைகர் ஹில்லை குறிவைத்து, அதன் பயணங்களின் போது பல முறை இலக்கை தாக்கியது.
  • டைகர் ஹில்ஸ்-ல் இரண்டு முக்கிய முகடுகள் உள்ளன. முதலாவது, டைகர் ஹில்லிருந்து மேற்கே சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளதற்கு "இந்தியா கேட்" என்றும் இரண்டாவதற்கு "ஹெல்மெட்" என்றும் பெயரிடப்பட்டது.
  • பாகிஸ்தானின் 12 வடக்கு லைட் தரைப்படையின் ஏறக்குறைய ஒரு படைப்பிரிவு முழு பகுதியையும் ஆக்ரமித்திருந்தது.
  • ஜூலை 3ஆம் தேதி, 18 கிரெனேடியர்கள் பட்டாளம் மோசமான வானிலை மற்றும் இருளின் மறைவின் கீழ் பீரங்கி மற்றும் சிறுபீரங்கி ஆகியவற்றால் குண்டு வீசுவதன் மூலம் அதன் பல திசைத் தாக்குதலைத் தொடங்கினர்
  • ஏ படைப்பிரிவு ஜூலை 4ஆம் தேதி 1.30 மணி நேரத்தில் டங் என்று அழைக்கப்படும் இடைநிலை பகுதியை கைப்பற்றியது.
  • கிழக்கில் இருந்து டி படைப்பிரிவின் தாக்குதலுக்கு கேப்டன் நிம்பல்கர் தலைமை தாங்கினார். டைகர் ஹில் உச்சியில் இருந்து 100 மீட்டருக்குள் அமைந்திருக்கும் ஏரியா காலரின் கிழக்கு பகுதியை சில துப்பாக்கி சண்டைக்கு பின்னர் டி படைப்பிரிவினர் வெற்றிகரமாக ஆக்கிரமித்த அவரது அணுகுமுறை, எதிரிகளை ஆச்சரியப்படுத்தியது.
  • டி படைப்பிரிவு மற்றும் லெப்டினன்ட் பால்வான் சிங்கின் கீழ் கதக் கமாண்டோ படைப்பிரிவும் எதிரிகளை ஆச்சரியப்படுத்தியது, இந்த முறை கடினமான வடகிழக்கு மலைப்பகுதியில், மேலே இருந்து 30 மீட்டர் தொலைவில் ஒரு தற்காலிக நிலையை பெற்றது.
  • ஜூலை 4ஆம் தேதி 0400 மணிக்கு, கவனமாக திட்டமிடப்பட்ட பீரங்கி தாக்குதலுக்கு பிறகு, சச்சின் நிம்பல்கர் மற்றும் பல்வான் சிங் ஆகியோர் தங்கள் ஆட்களுடன் செங்குத்தான மலையில் ஏறி டைகர் ஹில் டாப்பை அடைந்து எதிரிகளை பிடித்தனர். சிறிய கைகலப்பு சண்டைக்கு பிறகு, அவர்கள் இலக்கை கைப்பற்றுவதில் வெற்றி பெற்றனர்
  • 18 கிரெனேடியர்கள் பட்டாளம் உச்சியை கைப்பற்றியிருந்தாலும், அவர்களுடன் அங்கு இருப்பது எளிதாக இல்லை. அதிர்ச்சி பாகிஸ்தானியரை ஆட்கொண்டபோது எதிர் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
  • மேற்குப் பகுதியுடன் விநியோகப் பாதை அப்படியே இருக்கும் வரை டைகர் ஹில்ஸ்-லிருந்து எதிரிகளை முற்றிலுமாக வெளியேற்ற முடியாது என்பதை 8 மலைப் பிரிவு உணர்ந்தது.
  • மொஹிந்தர் பூரி மற்றும் MPS பஜ்வா ஆகியோர் 8 சீக்கிய படையினருக்கு ஹெல்மெட் மற்றும் இந்தியா கேட் ஆகியவற்றைத் தாக்கி கைப்பற்ற உத்தரவுகளை பிறப்பித்தனர்.
  • டைகர் ஹில்லின் 1.5 கிலோமீட்டர் வரை நீண்டிருந்த மேற்கு மலைப்பகுதி, 8 சீக்கியர் பட்டாளம் நிறுத்தப்பட்டிருந்த மலைப்பகுதிக்கான அணுகல் செங்குத்தான பாறையாக அமைந்திருந்தது.
  • மேஜர் ரவீந்திர சிங் மற்றும் லெப்டினன்ட் ஆர்.கே செஹ்ராவத் தலைமையிலான நான்கு JCO மற்றும் 52 வீரர்களைக் கொண்ட சீக்கிய பட்டாளத்தின் தற்காலிக படைவரிசை., கடுமையான சண்டையின் பின்னர் இந்தியா கேட் பகுதியை கைப்பற்ற முடிந்தது.
  • பலத்த உயிரிழப்புகளைச் சந்தித்த போதிலும், 8 சீக்கியர் பட்டாளம் அதன் வெற்றியை ஹெல்மெட் வரை மேற்கொண்டு ஜூலை 5ஆம் தேதி இலக்கை கைப்பற்றியது.
  • ஜூலை 8ஆம் தேதி டைகர் ஹில்ஸ்-ன் முழு இலக்கும் கைப்பற்றப்பட்டு 18 கிரெனேடியர்கள் பட்டாளம் இந்திய மூவர்ண கொடியை டைகர் ஹில்ஸ்-ல் ஏற்றினர்.

த்ரீ பிம்பிள்ஸ் பகுதி: த்ரீ பிம்பிள்ஸ் கூர்மையான, மலை உச்சிகள் சேர்ந்த பகுதி. இந்த பகுதி டோலோலிங் நாலாவுக்கு மேற்கே மார்போலா மலைப்பாதையில் பாயிண்ட் 5100க்கு அருகில் அமைந்துள்ளது. த்ரீ பிம்பிள்ஸ் தேசிய நெடுஞ்சாலை, டிராஸ் கிராமம் மற்றும் சாண்டோ நாலா ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தியது. இது நால், லோன் ஹில் மற்றும் த்ரீ பிம்பிள்ஸ் என மூன்று முக்கிய இடங்களைக் கொண்டிருந்தது.

செயல்பாடுகள்

  • தாக்குதலுக்கு இரண்டு மணி நேரத்திற்கு இருபது பீரங்கி அலகுகள் (சுமார் 120 துப்பாக்கிகள், சிறிய பீரங்கிகள் மற்றும் ராக்கெட் ஏவுகணைகள்) உயர் தூள் வெடிபொருட்களுடன் இலக்கில் குண்டுகளை வீசின.
  • டி படைபிரிவு மேஜர் மோஹித் சக்சேனா தலைமையிலும் ஏ படைப்பிரிவு, மேஜர் பி. ஆச்சார்யா தலைமையிலும், தாக்குதலுக்கு சென்றனர். உயிரிழப்புகள் இருந்தபோதிலும், அவர்கள் நள்ளிரவில் நோலில் ஒரு பாதுகாப்பான நிலையை அமைத்தனர்.
  • மேஜர் ஆச்சார்யா, கம்பெனி கமாண்டர் மற்றும் கேப்டன் விஜயந்த் தாப்பர் ஆகியோர் தனிப்பட்ட முறையில் தாக்குதலை நடத்தினர். இரண்டு அதிகாரிகளும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருந்தாலும் தொடர்ந்து தங்கள் வீரர்களை முன்னோக்கி அழைத்துச் சென்றனர். அவர்கள் வெற்றியை அடைந்தனர், ஆனால் அதற்காக மிக உயர்ந்த தியாகத்தை செய்தனர்.
  • அதிகாரிகளை இழந்த போதிலும், ஏ படைப்பிரிவின் மீதமுள்ள வீரர்கள் வேகமாக நின்று தங்கள் நிலையை தக்கவைத்துக் கொண்டனர். எதிரிகளின் எதிர் தாக்குதல் நமது சொந்த நடுத்தர துப்பாக்கிகளிலிருந்து வெளியான குண்டுகளால் சிதறடிக்கப்பட்டது.
  • B படைப்பிரிவு நோலில் ஏ படைப்பிரிவுடன் இணைக்கப்பட்டது. இப்போது கிடைத்த த்ரீ பிம்பிள்ஸ் மீதான நெருக்கமான கண்காணிப்புடன், எதிரிகளின் நிலை துல்லியமான பீரங்கித் தாக்குதல்களால் அழிக்கப்பட்டது
  • லோன் ஹில் என்பது எதிரிகளின் MMGயால் சூழப்பட்ட செங்குத்தான சரிவு பாதையை கொண்ட ஒரு இலக்காகும்.
  • நிலவொளி இரவு நேர நடவடிக்கைகளை இன்னும் கடினமாக்கியது
  • மோஹித் சக்சேனா தனது படைப்பிரிவை ஒரு ஆபத்தான நிலப்பரப்பு வழியாக கவனமாக வழிநடத்தினார். அவர் தெற்கிலிருந்து எதிரி நிலைகளைத் தாக்கினார். இந்த சாதனையைச் செய்ய, அவர் 200 அடி உயரத்திற்கு மேல் ஒரு செங்குத்தான பாறையில் ஏற வேண்டியிருந்தது. அவரது தைரியமான தலைமை லோன் ஹில்ஸ்-ஐ கைப்பற்ற அவரது படையினருக்கு உதவியது. அவருடன் ரைஃபிள்மென் ஜெய் ராம் மற்றும் கேப்டன் என்.கெங்குருஸ் ஆகியோரும் இருந்தனர்
  • ஜூன் 29ஆம் தேதியன்று த்ரீ பிம்பிள்ஸ் கைப்பற்றப்பட்டது

பாயிண்ட்5140ஐ கைப்பற்றல்

  • இலக்கின் பெரிய அளவு காரணமாக, பலதரப்பட்ட தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் அதைக் கைப்பற்ற படையணி திட்டமிட்டது.
  • கிழக்கிலிருந்து 18 கர்வால் ரைபிள்ஸ் பட்டாளம், தென்மேற்கிலிருந்து 1 நாகா பட்டாளம் மற்றும் தெற்கிலிருந்து 13 ஜே.ஏ.கே. பட்டாளம் ஆகியவை வரவழைக்கப்பட்டன
  • ஜூன் 19ஆம் தேதியன்று 13 JAK ரைபிள்ஸ்-ன் பி மற்றும் டி படைப்பிரிவுகள் தெற்கு சரிவில் ஏறி பாயிண்ட் 5140க்குச் சென்று எதிரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. போரில், கேப்டன் விக்ரம் பத்ரா அபூர்வமான திறமையைக் காட்டி 4 எதிரி வீரர்களைக் நேருக்கு நேர் சண்டையில் கொன்றார். அவரது வெற்றி சமிக்ஞை காட்டி "இன்னும் அதிகம் வேண்டும்” என்று அவரது கமாண்டிங் ஆபிசரிடம் கூறினார் .
  • பாயிண்ட் 5140-ல் இறுதி தாக்குதலுக்கு கேப்டன் S.S. ஜாம்வால் தலைமை தாங்கினார். ஜூன் 20ஆம் தேதி காலையில் 7 தற்காலிக அரண்களும் அகற்றப்பட்டு பாயிண்ட் 5140-ல் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மாஷ்கோ பள்ளத்தாக்கு

மாஷ்கோ பள்ளத்தாக்கு-மாஷ்கோ பள்ளத்தாக்கில் பாகிஸ்தானியர்கள் ஆக்கிரமித்த அனைத்து சிகரங்களிலும் பாயிண்ட் 4875 முக்கியமானது.

பாயிண்ட் 4875

சிகரத்தின் முக்கியத்துவம்- மொகல்பூராவிலிருந்து டிராஸ் வரையிலான கிட்டத்தட்ட 30- கிலோமீட்டர் நீளம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருந்து உயரமான செங்குத்தான சிகரத்தை காண முடிவதால் பாகிஸ்தானிய பீரங்கிகள் மாதாயினிலிருந்து டிராஸ் வரையிலான வாகனங்களின் இயக்கத்தை எளிதில் தடைசெய்ய முடியும்.

ஆபரேஷன்

13 JAK ரைபிள்ஸுக்கு இந்த இலக்கு ஒதுக்கப்பட்டது. ஜூலை 4ஆம் தேதி பீரங்கித் தளம் பிளாட் டாப் மீது தாக்குதலைத் தொடங்கியது, இது பாயிண்ட் 4875ஐ ஒட்டியுள்ள இந்த நிலையின் மீதான எதிரிகளின் பாதுகாப்பின் ஒரு பகுதியானது கிழக்கு சரிவுகளில் பாயிண்ட் 4875 செல்லும் வழியில் உள்ளது. சி படைபிரிவிற்கு தலைமை தாங்கிய மேஜர் குர்பிரீத் சிங் அதே நிலைக்கு மேற்கு சரிவுகளில் நடந்து வந்தார். பீரங்கித் தாக்குதல் தொடங்கிய பின்னர், தாக்குதல் தளத்திலிருந்து, (கேப்டன் விக்ராம் பாத்ராவால் கட்டளையிடப்பட்டது) MMGS மூலம் தாக்குதல் படையினருக்கு சரியான திசையை பராமரிக்க உதவுவதற்காக அடையாள சுற்றுகளைச் சுட்டார்.

  • இரு தரப்பிலிருந்தும் தாக்குவதன் மூலம் பட்டாலியனால் எதிரியின் கவனத்தை பிரிக்க முடிந்தது .ஆனால், படைப்பிரிவுகள் இலக்கை நெருங்கியபோது, ​​ பாயிண்ட் 4875-லிருந்து வந்த துல்லியமான சிறிய ஆயுதங்கள் மற்றும் MMG-கள் மூலமான தாக்குதல் காரணமாக பின்வாங்கியது. வீரம் மிக்க முயற்சிகள் இருந்தபோதிலும் படைபிரிவினர்களால் மேலும்முன்னேற முடியவில்லை.
  • பகல் வெளிச்சம் வந்தபோது வீரர்கள் திறந்த வெளியில் மலையில் இருப்பதை கண்டனர்.
  • ஏ படைப்பிரிவு மற்றும் சி படைபிரிவுடன் முன் கண்காணிப்பு அதிகாரிகள், முறையே கேப்டன் B.S. ராவத் மற்றும் கேப்டன் கணேஷ் பட் ஆகியோர் பல மணிநேரங்களுக்கு பீரங்கி மூலம் இலக்கை தாக்கினர். சில எதிரி தற்காலிக அரண்களை அழிக்க ஃபாகோட் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. படைப்பிரிவு மீண்டும் ஒரு முறை எதிரி நிலையைத் தாக்கி, ஜூலை 5ஆம் தேதி பிற்பகலுக்குள் பிளாட்டாப்பைக் கைப்பற்ற முடிந்தது.
  • நெருங்கிய காலகட்டத்தில் ரைபிள் மேன் சஞ்சய் குமார் மற்றும் ஷியாம் சிங் ஆகியோர் சிறந்த வீரம் காட்டினர். அடுத்த நாள், எதிரிப் படையினர் இந்த துருப்புக்களை கடும் பீரங்கி தாக்குதல்களுக்கும் இடைப்பட்ட MMG துப்பாக்கி சண்டைக்கும் உட்படுத்தினர். மேஜர் விகாஸ் வோஹ்ரா மற்றும் கேப்டன் விக்ரம் பத்ரா ஆகியோரின் கீழ் கூடுதல் படையினர் அனுப்பப்பட்டனர். இலக்குக்கு அருகில் கடும் சண்டை தொடர்ந்தது.
  • பாயிண்ட் 4875இன் வடக்கே உடனடியாக எதிரி இருப்பிடம் கைப்பற்றப்பட வேண்டும் என்பது தெளிவாகியது. கேப்டன் விக்ரம் பாத்ரா இந்த பணியை மேற்கொண்டு தனது ஆட்களை வழிநடத்த வழிவகுத்தார். அவர் பணியை நிறைவேற்ற மிக உயர்ந்த தியாகம் செய்தார்.
  • நீண்ட கால போரின்போது ஏராளமான பாகிஸ்தான் வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
  • 13 JAK ரைபிள்ஸ், 2 நாகா மற்றும் 17 JATக்கு அவர்கள் பணிகளில் உதவ உதவியது

ஜூலு ஸ்பூர்

கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடவடிக்கைகளில் முழுமையாக விலகுவதற்கான ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மதிக்கத் தவறியபோது,​​எதிரிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக தொடங்கப்பட்டது.

ஜூலு ஸ்பூரின் முக்கியத்துவம்: மாஷ்கோ துறையில் அமைந்துள்ளது ஜூலு ஸ்பர். ஜுலு ஸ்பூரின் முக்கிய அம்சங்கள் ட்ரை-ஜங்ஷன், ஜூலு வரம்பு கோடு மற்றும் சாண்டோ டாப் ஆகியவை அடங்கும். இந்த வளாகம் கட்டுப்பாட்டு கோடு பகுதி முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது.

  • இந்த தாக்குதல் 192 மலை படையணி தளபதி, பிரிகேடியர் M.P.S பஜ்வா அவர்களால் திட்டமிடபட்டு இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டது. கட்டம் 1 இல், 3/3 கோர்கா ரைபிள்ஸ் முச்-சந்திப்பைக் கைப்பற்ற நியமிக்கப்பட்டது.
  • ஜூலை 22ஆம் தேதியில் இந்த நடவடிக்கைகள் தொடங்கியது, கேப்டன் ஹேமாங் குருங்-கின் கீழ் சி படைப்பிரிவு தாக்குதலுக்கு வழிவகுத்தது. அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டபோது, ​​இரண்டாவது நிளை மேஜர் S.சைனி, வேலையை முடிக்க முன்வந்தார்.
  • கேப்டன் அமித் ஆல் (56 மலை படையணியின் தளபதி பிரிகேடியர் ஏ.என். ஆல் அவர்களின் மகன்) மற்றும் ரைபிள்மேன் தன் பகதூர் மற்றும் தினேஷ் குருங் ஆகியோர் எதிரிகளை வெளியேற்றுவதிலும் தற்காலிக அரண்களை அழிப்பதிலும் அசாத்தியமான துணிச்சலைக் காட்டினர்.
  • மேஜர் பல்லவ் மிஸ்ராவின் கீழ் உள்ள டி படைப்பிரிவு இப்போது ஜூலு ஸ்பூரின் தளத்தைத் தாக்க முன்வந்தது. ட்ரை-ஜங்ஷன் தாக்குதல் குழுவில் அங்கம் வகித்த சி படைப்பிரிவின் கேப்டன் நந்தன் சிங் மிஸ்ரா, டி படைப்பிரிவில் சேர முன்வந்தார்.
  • அவர் எதிரிகளின் திறமையான பீரங்கித் தாக்குதலை வீழ்த்தியதால் எதிரிகளின் தாக்குதல் படையை நிறுத்த உதவியது. கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், டி படைப்பிரிவு இந்த இலக்கை ஜூலை 24ஆம் தேதியன்று கைப்பற்றியது.
  • இரண்டாவது கட்டம், இந்த கட்டத்திற்கான வெடிபொருட்கள் தளம் பாதுகாக்கப்பட்டபோது 9 பாரா (SF) ஆல் தொடங்கப்பட்டது
  • [9] பாரா (SF) 3/3 கோர்கா ரைஃபிள்ஸில் இருந்து துருப்புக்களுடன் வலுப்படுத்தப்பட்டது, மேலும் அவர்கள் ஜூலூ ஸ்பூரிலிருந்து எதிரிகளை விரட்டியடித்தனர். இந்த நடவடிக்கையில் சுதிர் குமார் மற்றும் நாயக் கவுசல் யாதவ் ஆகியோர் அபாரமான துணிச்சலைக் காட்டினர்.

படாலிக் பிரிவு: இங்கு பாகிஸ்தானியர்கள் 08-10 கி.மீ. வரை ஊடுருவியிருந்தனர் இந்த வரம்பு கோடுகள், ஜுபார்-குகார்தாங்-கலூபர் மற்றும் பாயிண்ட் 5203-குருபார் போ பகுதிகளில் 15,000 அடி முதல் 16,800 அடி வரை வேறுபடுகின்றன.

கலூபர்

கலூபரின் முக்கியத்துவம்

  • பத்மா கோ-கலூபர் ரிட்ஜ்லைன் கிழக்கில் ஜங்க் லுங்க்பா, மேற்கில் கிராக்ரியோ நாலா அதன் தென்மேற்கில் குகார்தாங் மற்றும் எதிரியின் தளவாட தளமான முந்தோ தலோ ஆகியவை வடமேற்கில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
  • கலூபர் ரிட்ஜ் படாலிக் துறையில் எதிரிகளின் பாதுகாப்பு மையமாக இருந்தது

செயல்பாடுகள்

  • ஜூன் 30ஆம் தேதியன்று 22 கிரேனடியர்கள் கலுபார் மீது ஆரம்ப தாக்குதலை நடத்தினர். விகாஸ் பட்டாலியனைச் (திபெத்திய வம்சாவளியைச் சேர்ந்த துருப்புக்களை உள்ளடக்கியது) சேர்ந்த மூன்று மலையேறு நிபுணர்கள் செங்குத்தான மற்றும் கரடுமுரடான சரிவைத் தாக்க 22 கிரெனேடியர்களுக்கு உதவினர். பாயிண்ட் 5287க்கு தெற்கே உள்ள கலூபர் மலைப்பாதையில் இரண்டு சிறிய பாதுகாப்பு நிலையை பெறுவதற்கு முன்னர் அவர்கள் கடுமையான எதிரிகளின் எதிர்ப்பைக் சமாளிக்க வேண்டியிருந்தது. பட்டாலியனுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, ஆனால் மேஜர் அஜித் சிங்கின் படைப்பிரிவு எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக உச்சியில் இருக்க முடிந்தது. அதி விரைவாக, ரிசர்வ் பட்டாலியன்கள், கிரெனேடியர்களால் பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு நிலைகளை விரிவுபடுத்தவும், கலூபரைக் கைப்பற்றவும் சேர்க்கப்பட்டன.
  • ஆரம்ப நடவடிக்கைகளில் பங்கேற்க மே 9ஆம் தேதி 1/11 கோர்கா ரைபிள்ஸ் பட்டாலியன் பட்டாலிக் பகுதியில் சேர்க்கப்பட்டது. ஜூன் 1/11 இறுதியில், கலோபார் ரிட்ஜின் மேற்கில் உள்ள ஜுபார் மற்றும் சுருபார் சிஸ்போவில் எதிரிகளின் பாதுகாப்பை அழிப்பதில் கோர்கா ரைபிள்ஸ் மும்முரமாக இருந்தது.
  • ஜூலை 2ஆம் தேதி, பட்டாலியன் யால்டோரில் இருந்து பாயிண்ட் 4812-ன் அடிவாரத்தில் ஒரு பகுதிக்கு முன்னோக்கி சென்றது. தாக்குதலை கட்டியெழுப்ப அடுத்த நாள் முடிந்தது. இதற்கிடையில், போஃபோர்ஸ் மற்றும் 130 மிமீ உயரமுள்ள குண்டுகள் அடங்கிய படைப்பிரிவு பீரங்கிகள் எதிரிகளின் தற்காலிக அரண்களை அழித்து, அவரின் தகவல் தொடர்பு மற்றும் விநியோகத்தை சீர்குலைத்தன. ஏழு மணி நேரம் ஒரு மலைப்பாதையில் ஏறிய பிறகு, கோர்காக்கள் கலூபர் மலைப்பாதையில் தங்கள் இலக்கை அடைந்தனர். போரின் இந்த பகுதியில் வீரம் பற்றிய சில செயல்கள் காணப்பட்டன.
  • கலூபருக்கு தெற்கே எதிரி நிலையில் உள்ள பதுங்கு குழிகளைக் லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே மற்றும் அவரது ஆட்களால் கைப்பற்ற்றியதால் அது கலூபரைக் கைப்பற்ற உதவியது.
  • கமாண்டிங் ஆபிசர், கர்னல் லலித் ராய் 22 கிரேனடியரைச் சேர்ந்த அஜித் சிங்குடன் இணைந்தார். லலித் ராயின் முழங்காலில் பலத்த காயம் அடைந்திருந்தாலும், அடுத்த மூன்று நாட்களுக்கு எதிரிகளுடன் நெருங்கிய இடங்களில் சண்டையிட வேண்டிய தனது ஆட்களை அவர் தொடர்ந்து வழிநடத்தினார்.
  • தைரியமாக போராடிய இன்னும் சிலரில் நாயக் ஞானேந்திர குமார் ராய் மற்றும் ஹவில்தார் பீம் பகதூர் திவான் ஆகியோர் அடங்குவர். பட்டாலியன் இறுதியில் ஜூலை 6ஆம் தேதி கலூபரிடமிருந்து எதிரிகளை அகற்றி, தெற்கில் நிறுத்தப்பட்ட 12 JAK மென்காலாட்படையுடன் இணைந்தது.
  • எதிரிகள் பலத்த உயிரிழப்புகளை சந்தித்து அமெரிக்கா தயாரித்த ஸ்டிங்கர் ஏவுகணைகள் உட்பட ஒரு பெரிய அளவிலான ஆயுதங்களை விட்டுச் சென்றனர்.

பத்மா கோ

கலூபர்-பாயிண்ட் 5287 வளாகத்திலிருந்து வடக்கே ஓடும் பத்மா கோ ரிட்ஜில் ஸ்டாங்பா, பாயிண்ட்5000 மற்றும் டாக் ஹில் ஆகியவை உள்ளன.

  • இந்த நிலையின் முக்கியத்துவம் என்னவன்றால் கலூபார் - பாயிண்ட் 5287 வளாகத்தின் மேற்கே செயல்பாடுகளைத் தடையின்றி மேற்கொள்ளப்படுவதற்கு இந்த ரிட்ஜ் கோட்டிலிருந்து எதிரிகளை வெளியேற்ற வேண்டியது அவசியம்.
  • லடாக் சாரணர்களின் நெடுவரிசை ஜூன் 30ஆம் தேதியன்று பாயிண்ட் 5000 மீது தாக்குதல் நடத்தியது. அந்த இடங்களில் செங்குத்தான சரிவு மற்றும் இடுப்பளவு உயர பனி பற்றியிருந்த போதிலும், நெடுவரிசை நிலையைக் கைப்பற்றுவதில் வெற்றிபெற்றது.
  • பத்மா கோ நிலை அடுத்த சில நாட்களில் உறுதியான பீரங்கிகள் மற்றும் காலாட்படை சண்டையின் மூலம் கைப்பற்றப்பட்டது.
  • ஜூலை 5-6 தேதிகளில் புதிய தாக்குதல்களில், கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும் டாக் ஹில் கைப்பற்றப்பட்டு ஸ்டங்கா வடக்கில் ஒரு பாதுகாப்பான நிலை நிறுவப்பட்டது.
  • இந்த போரில், நாயக் சுபேதார் தாஷி சேப்பல் முன்மாதிரியான துணிச்சலையும் தலைமைத்துவத்தையும் காட்டினார்.
  • மேஜர் ஜான் லூயிஸ் மற்றும் கேப்டன் N.K. பிஷ்னோய்-ன் கீழ் இரண்டு பிரிவுகள் வலுவான பத்மா கோ நிலையைத் தாக்கினர். ஜூலை 9 அன்று நிலை கைப்பற்றப்பட்டது. லடாக் சாரணர்கள் எல்லை கோட்டிற்கு அருகிலுள்ள பாயிண்ட் 5229 ஐ கைப்பற்றினர்.
  • பாயிண்ட் 4812-கலூபர், பாயிண்ட் 5287-பத்மா கோ ஆகியவற்றின் வரம்பு எல்லைகளின் இழப்பு படாலிக் பகுதியின் கிழக்கு பகுதியில் எதிரிகளின் பாதுகாப்பின் பின்புலத்தை உடைத்தது.

ஜுபார், தரு மற்றும் குகர்தாங்

  • பாயிண்ட் 4812 – கலூபர், பாயிண்ட் 5287 -பத்மா கோ வரம்பு எல்லைகள் மீண்டும் கைப்பற்றப்பட்டதால், எதிரிகளின் நடமாட்டம் மற்றும் திரும்பிச் செல்லும் வழிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
  • 70 காலாட்படை படைப்பிரிவு மேற்கிலிருந்து ஜுபார், தாரு மற்றும் குகர்தாங் பகுதிகளைச் சமாளிக்க நிலைநிறுத்தப்பட்டது.
  • ஜுபார் வளாகத்தை மீண்டும் கைப்பற்ற 1 பிகார் பட்டாளம் பணிக்கப்பட்டது. ஜுபார் மற்றும் தாரு மீதான தாக்குதல்களுக்கு முன்னதாக உறுதிமிக்க பீரங்கி தாக்குதல்கள் நடந்தன. ஒரு புதுமையான நடவடிக்கையில், பிரிவு 122-மிமீ கிராட் மல்டிபாரல் ராக்கெட் ஏவுகணைகள் மூலம் எதிரிகளின் பாதுகாப்பைத் தகர்க்க நேரடி துப்பாக்கிச் சூட்டைப் பயன்படுத்தப்பட்டது. நேரடி தாக்குதல்கள் பல எதிரி தற்காப்பு அரண்களைச் சிதைத்தன.
  • ஜூன் 29ஆம் தேதியன்று, 1 பிகார் பட்டாளம் தனது தாக்குதலை நடத்தியது. தாக்குதலின் முதல் கட்டம் திட்டமிட்டபடி நடந்தது. ஜூன் 30ஆம் தேதியன்று ஜுபார் கண்காணிப்புப் பகுதியில் (OP) பாகிஸ்தானியர்கள் அவர்கள் தற்காப்பு அரண்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
  • எதிரிகளுக்குப் அதிகப்படியான உயிரிழப்புகளை ஏற்படுத்தியதன் மூலம் எதிரியின் எதிர் தாக்குதல் எளிதாக முறியடிக்கப்பட்டது.
  • ஜுபார் கண்காணிப்புப் பகுதிக்கு வடக்கே உள்ள ஜுபார் டாப் ஊடுருவ முடியாத கடினமான இடம் என்பதை நிரூபித்தது. இந்த நிலைப்பாடு 5 நாள்கள் வரை நீடித்தது. 1 பிகார் பட்டாளத்தின் பீரங்கி மற்றும் காலாட்படை மோட்டார்கள் ஜுபருக்குப் பின்னால் எதிரிகளின் வெடிமருந்து கிடங்கைத் தாக்கியதால், அது முற்றிலும் சேதமடைந்தது.
  • இது ஜுபார் டாப்பில் உள்ள பாகிஸ்தான் படையினரிடையே பீதியை ஏற்படுத்தியது. அதன்பிறகு அவர்கள் பின்வாங்க தொடங்கினர். ஜூலை 6ஆம் தேதி இரவு ஒரு புதிய தாக்குதல் நடத்தப்பட்டது. பெரிய பீரங்கிகள் மற்றும் சிறிய ஆயுதத் தாக்குதலுக்கு மேஜர் KPR ஹரி தலைமை தாங்கினார். அவரும் மற்ற உறுப்பினர்களும் எதிர்பாராத திசையில் இருந்து ஜுபார் மேலே செல்லும் ஒரு குன்றின் உச்சியை அடைந்தனர். எதிரிகள் அறியாவண்ணம் அவர்கள் எதிரி ராணுவத்தின் 50 மீட்டருக்குள் உள்ள இடத்தை அடைந்து ஜூலை 7ஆம் தேதி ஜுபரைக் கைப்பற்றினர்.
  • ஜூலை 9ஆம் தேதி, தாரூ நிலையை (பாயிண்ட் 5103) மீண்டும் கைப்பற்றியதன் மூலம் பிகார் பட்டாளம் தன்னுடைய மகுடத்தில் மற்றொரு பெருமையையும் சேர்ந்தது. 15,000 அடிக்கு மேல் ஒரு கடினமான ஏறுதலுக்குப் பிறகு பட்டாலியன் பின்னர் குகார்தாங் வரம்பு எல்லையில் 1/11 கோர்கா ரைஃபிள்ஸுடன் இணைக்கப்பட்டது. குக்கார்தாங் மலைப்பாதையில் தாரு ஒரு ஆதிக்கம் செலுத்தும் பகுதியாகும்.

குகர்தாங்

  • குகர்தாங் மீதான தாக்குதல் ஜூலை 8ஆம் தேதியன்று 1/11 கோர்கா ரைபிள்ஸ்களால் தொடுக்கப்பட்டது. உறுதியான பீரங்கி தாக்குதல் மற்றும் சிறிய பீரங்கி தாக்குதல் மூலம் பயங்கரமான தாக்குதல் நடைபெற்றது.
  • ஜூலை 8ஆம் தேதி ஒரு படைப்பிரிவு பாயிண்ட் 4821ஐ கைப்பற்றியது. மேலும் எதிரிகளின் மிகப்பெரிய பீரங்கிகள் இருந்தபோதிலும் டி படைப்பிரிவினரால் ரிங் விளிம்பைப் பாதுகாக்க முடிந்தது. எதிரிகளின் இந்த இரண்டு நிலைகளும் குகார்தாங் டாப் செல்லும் வழியில் இருந்தன. அச்சுறுத்தலாகத் தோன்றிய குகர்தாங் வரம்பு, ஜூலை 9ஆம் தேதிக்குள் அனைத்து எதிரிகளின் நிலைகளிலிருந்தும் மீட்கப்பட்டது.

இதையும் படிங்க: தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்புவதற்கான சபாநாயகரின் அதிகாரத்தை கேள்வி கேட்பது கவலை அளிக்கிறது: பி.டி.டி ஆசாரி

ABOUT THE AUTHOR

...view details