தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 26, 2019, 2:13 PM IST

ETV Bharat / bharat

மா.கம்யூ கட்சியின் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு! - ஏன் தெரியுமா?

புதுச்சேரி: அக்டோபர் 10 முதல் 16வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக நாடு தழுவிய போராட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி   செய்தியாளர் சந்திப்பு

புதுச்சேரியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்தியில் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி பதவியேற்றதிலிருந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்துவருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

மா.கம்யூ கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர் சந்திப்பு

இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாகச் சொன்ன சீதாராம் யெச்சூரி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை, கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் ஏற்றுமதி குறைந்ததால் அதன்மூலம் கிடைத்த வருமானம் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனால் பணம் உள்ளவர்கள்தாம் வசதி படைத்தவர்களாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஏழை ஏழையாகவே இருந்துவருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மத்திய நிதியை பொது விவகாரத்திற்கும் நாட்டின் உள்கட்டமைப்பிற்கும் பயன்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 10 முதல் 16வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படவிருப்பதாகவும் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மா.கம்யூ மாவட்ட செயற்குழு உறுப்பினர் கைதை கண்டித்து போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details