பிகார் மாநிலத்தில் சசாரம் (Sasaram) பகுதியைச் சேர்ந்த சாக்ஷி, மே 4ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். ஆனால், சிறுமியின் தந்தை வெளியூரில் சிக்கிக் கொண்ட காரணத்தினால், பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட முடியாமல் சோகத்தில் இருந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார், தனது உறவினருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இந்தக் குறுந்தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியது. சசாரம் ஆய்வாளர் வாட்ஸ்அப் மெசேஜை பார்த்துவிட்டு சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க முடிவு செய்தார்.