தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாய்லாந்து பெண் பாலியல் வன்புணர்வு: இருவர் கைது! - Kerala latest news

கொச்சி: தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இருவரை கேரள மாநில காவலர்கள் கைது செய்தனர்.

Thailand national raped  Malappuram  Mohammed Insaf  Ansaruddin  Kondotty  Accused from Kondotty
கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

By

Published : Feb 7, 2020, 9:31 AM IST

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளியில் தனது குழந்தையை கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு சேர்த்தார். இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த முகமது இன்சாஃப் என்பவருடன் முகநூலில் நண்பராக இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது குழந்தையை சந்திக்கச் சென்ற அந்தப் பெண், மலப்புரத்திலுள்ள விடுதி ஒன்றில் தங்கினார். அப்போது, அவரை பார்க்க வந்த முகமது இன்சாஃப், தனது நண்பர் அன்சாருதீன் என்பவரையும் அழைத்துச் சென்றார்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

அங்கு இருவரும் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தனர். இதன்பின் அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: இளம்பெண்ணைக் கடத்தி காருக்குள்ளேயே கட்டாய தாலி கட்டிய இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details