தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 28, 2021, 6:52 PM IST

ETV Bharat / bharat

நடைப்பயிற்சிக்கு சென்ற தெலுங்கு தேசம் பிரமுகர் கொலை: போலீஸ் விசாரணை!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் பிரமுகர் புலி சுவாமியை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தெலுங்கு தேசம் கட்சியின் பிரமுகர் கொலை
தெலுங்கு தேசம் கட்சியின் பிரமுகர் கொலை

தெலங்கானா மாவட்டம் ஜங்காவோனில் தெலுங்கு தேசம் கட்சியின் பிரமுகர் புலி சுவாமி (53) இன்று (ஜன.28) காலை ஹைதராபாத்-வாரங்கல் நெடுஞ்சாலையிலுள்ள சமூக நல குடியிருப்புப் பள்ளி அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் புலி சுவாமியை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், புலி சுவாமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தனியார் பள்ளி நிர்வாகி கொலை முயற்சி: கூலிப்படை அட்டகாசம்

ABOUT THE AUTHOR

...view details