தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் 27 வயதான மாடல் அழகி ஒருவர், தெலங்கானா முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் பாஜக பிரமுகருமான நந்தேஷ்வர் கவுடு, இவரது மகன் ஆஷிஷ் கவுடு மீது மந்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரில், ஆஷிஷ் கவுடு ஞாயிற்றுக்கிழமை (டிச1) ஓட்டலில் வைத்து தவறாக நடந்துக் கொண்டார். அவரின் செயலிலும் பேச்சிலும் வக்கிரம் தெரிந்தது.” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவலர்கள் ஆஷிஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354 (பெண்களுக்கெதிரான குற்றங்கள்) மற்றும் 509 (ஆபாசமாக திட்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.