Latest National News: பிகார் மாநிலத்தில் தற்போது வரலாறு காணாத வகையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிகார் தலைநகர் பாட்னா வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிகார் மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், முதலமைச்சர் நிதிஷ்குமாரைக் கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர், "பாட்னா முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இங்குள்ள மழைநீர் வடிகால் அமைப்பு முற்றிலுமாக செயலிழந்துவிட்டது. வடிகால் அமைக்கும் பணியில் பெரும் ஊழல் நடந்துள்ளதை இது உணர்த்துகிறது" என்றார்.