உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகாரைச் சேர்ந்த 20 வயதான பெண் ஒருவருக்கு கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ரக்ஷா பந்தன் கொண்டாடுவதற்காக பெற்றோர் வீட்டிற்கு வந்த அப்பெண், இரவு மாடியில் உறங்கிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது கவுசல் என்ற இளைஞர், துப்பாக்கியால் அப்பெண்ணை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடி உள்ளார். சத்தம்கேட்டு ஓடிவந்த பெற்றோர், தனது மகள் சடலமாகக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலின்பேரில் விரைந்த வந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.