தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எழுத்தாளர் கி.ரா 98 ! - எழுத்தாளர் கி.ரா 99

புதுச்சேரி : கரோனா காலத்தில் கையெழுத்துப் பிரதியாக புத்தகம் ஒன்றை எழுதி முடித்துள்ள எழுத்தாளர் கி.ரா 98ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்!

எழுத்தாளர் கி.ரா 99 !
எழுத்தாளர் கி.ரா 99 !

By

Published : Sep 16, 2020, 1:37 AM IST

Updated : Sep 16, 2020, 4:44 PM IST

எழுத்துலகவாசிகளால் கி.ரா என அன்போடு அழைக்கப்படும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள இடைசெவல் கிராமத்தில் 1922ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி பிறந்தார்.

கரிசல் இலக்கியத்தின் முன்னோடி எனப் போற்றப்படுகிற இவர் 1958ஆம் ஆண்டு தனது சரஸ்வதி இதழ் மூலம் எழுத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஏழாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ள இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக பணியாற்றும் நிலையை அடைந்தார். அதற்கு காரணம் அவரது எழுத்து.

சாகித்ய அகாடமி, இலக்கிய சிந்தனையாளர் விருது என பல விருதுகளை பெற்று எழுத்துலகின் அனைத்து உச்சங்களையும் தொட்ட அவருக்கு இன்றுடன் 98ஆவது வயது நிறைவுறுகிறது.

98 வயதிலும் எழுத்து மற்றும் வாசிப்பின் மீதான ஆர்வம் குன்றிராத அவர் கரோனா ஊரடங்கு காலத்தில் பாலுறவு குறித்த தனது கையெழுத்தில் புத்தகம் ஒன்று எழுதியுள்ளார்.

அண்டரெண்டப் பட்சி என்ற பெயரில் அவர் எழுதி உள்ள இந்த நூலை அச்சில் ஏற்றாமல் வாசகர்களுக்கு பிரதியாக வெளியிட்டுள்ளார்.

Last Updated : Sep 16, 2020, 4:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details