மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தொழிலாளர்களாக பணிபுரிந்துவருகின்றனர். இவர்கள் மத்திய அரசு அறிவித்துள்ள முழு அடைப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது வேலை இழந்துள்ள நிலையில், கையில் பணமின்றி கஷ்டப்படுகின்றனர். இந்தநிலையில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு மாநில அரசை வலியுறுத்திவருகின்றனர்.
இதற்கிடையில் இன்று சுமார் 450க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரத்னகிரி சால்வி நிறுத்தத்திலிருந்து ஊர்வலமாக சென்றனர். இதில் பிற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலத்தை காவலர்கள் லேசான தடியடி நடத்தினார்கள். மேலும் ஊர்வலத்தில் கலந்துகொண்ட சிலரை வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அகற்றினர்.