தமிழ்நாடு

tamil nadu

’இவன் கரோனாவை பரப்ப வந்துருக்கான்’ - அச்சத்தில் இளைஞர் அடித்துக் கொலை

By

Published : Apr 9, 2020, 10:39 AM IST

டெல்லி: வெளிமாநிலம் சென்று வந்தவருக்கு கரோனா வைரஸ் இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

்ே்
ே்

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கரோனா அறிகுறிகள் உள்ளவர்களும், கரோனா நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி பவானாவில் உள்ள ஹரேவாலி கிராமத்தை சேர்ந்தவர் அலி. இவர் மத்தியப் பிரதேசத்தில் போபால் பகுதியில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றார். ஆனால், கரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சொந்த ஊர் செல்ல முடியாமல் அங்கேயே தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 45 நாள்கள் கழித்து காய்கறி ஏற்றி வந்த லாரியில் டெல்லிக்கு அவர் திரும்பினார். அதனையடுத்து இவர், ஆசாத்பூர் காய்கறி சந்தையில் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே விடுவிக்கப்பட்டார்.

ஆனால், மிகுந்த மகிழ்ச்சியுடன் சொந்த ஊரில் கால் பதித்த அலிக்கு கரோனா வைரஸ் இருப்பதாகவும் அதை அந்தப் பகுதி முழுவதும் பரப்புவதற்கே கிராமத்திற்கு வந்துள்ளார் என்ற வதந்தியும் பரவியது . இதனால் அச்சமடைந்த சில கிராம மக்கள், அலியை சாலையில் சுற்றிவளைத்து தாக்கினர்.

இந்தத் தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பலத்த காயமடைந்த அலியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலியே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவி

ABOUT THE AUTHOR

...view details