தமிழ்நாடு

tamil nadu

வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - 6 பேர் உயிரிழப்பு!

By

Published : Mar 28, 2020, 1:22 PM IST

தெலங்கானா: மினிலாரி மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

six karnataka people died in Accident at shamshabad லாரி விபத்து சூர்யாபேட் லாரி விபத்து தெலுங்கானா லாரி விபத்து Teleangana Lorry Accident Lorry Accident Suryapet Lorry Accident
Teleangana Lorry Accident

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேர் தெலங்கானாவிற்கு கூலிவேலைச் செய்ய வந்துள்ளனர். கரோனா வைரஸ் அச்சுறுத்தலால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் வேலை கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதன்காரணமாக, வீடு திரும்ப எண்ணிய 30 பேரும் மீண்டும் மினிலாரியில் ராய்ச்சூருக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, மினிலாரி சூர்யாபேட் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மினிலாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

விபத்தில் உருக்குலைந்து காணப்படும் லாரி.

இந்த விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த ஆறு பேரும் ஓஸ்மானியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:திருப்பூர் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து!

ABOUT THE AUTHOR

...view details