கரோனா பரவலுக்கு மத்தியில் நாடு முழுவதும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவருவதால் வெளியில் செல்லும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தொற்று பரவாமல் தடுக்கவும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில், அதிகமாக கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான முதல் ஐந்து மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டன. இருப்பினும், பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிய மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் தற்போது தென்மேற்கு பருவகாலம் வந்துவிட்டதால் அங்கு அதிக மழை பெய்யும். மழைக் காலத்தில் மக்கள் தங்கள் முகக்கவசங்களை உலர வைப்பது கடினம். அதனால் தொற்று பரவும் சாத்தியக்கூறும் அதிகம். இதனைக் கருத்தில்கொண்டு சூரத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்று நீர், எண்ணெய் உள்ளிட்ட திரவங்களை எதிர்க்கும் தன்மைகொண்ட முகக்கவசங்களைத் தயாரித்துள்ளது.