தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 24, 2019, 11:10 AM IST

ETV Bharat / bharat

ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை!

டெல்லி: ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானா காவல் துறையினர் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

supreme court

ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றி உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக ஐஜி முருகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், பாலியல் புகார் குறித்து பதிலளிக்க பெண் எஸ்.பி மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details