கேரள மாநிலம், ஆலப்புழா அடுத்த மலாவிகெரே பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் புதுப்பள்ளிகுன்னு பகுதியைச் சேர்ந்த நவினீத்(11) என்ற மாணவர் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் வழக்கம்போல் பள்ளியில் மதிய உணவை முடித்துவிட்டு கைகழுவுவதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள குழாயடிக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் சகமாணவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில் மாணவர்கள் கையில் இருந்த கிரிக்கெட் மட்டை கை நழுவி நவினீத்தின் தலையில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த மாணவரை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.