அண்ணல் காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தேசத்தின் தந்தை காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நமது ஈ டிவி பாரத் சிறப்பு வீடியோ பாடலை வெளியிட்டது. இந்த வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் ட்வீட்-ல், "பல்வேறு பாடகர்களால் பாடப்பட்ட அண்ணல் காந்தியின் 'வைஷ்ணவ் ஜன தோ' பாடல், காந்தியடிகளின் விருப்பமான பாடல். இந்த பாடல் நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஒரு வாழ்க்கைப் பாடம்’’ எனப் பதிவிட்டார்.
இதுகுறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "இந்த தேசத்தின் தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். இது நாடு முழுவதும் செய்யப்பட்டுள்ள பணிகளை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் ஈடிவி பாரத் தயாரித்த சிறப்பு பாடல் வீடியோவை நாங்கள் காட்டியுள்ளோம். இது அண்ணல் காந்திக்கு அஞ்சலி செலுத்துவதோடு இந்தியாவின் கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் ஒரு சிறந்த முயற்சி" எனப் பாராட்டியுள்ளார்.