புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சதுர்த்திக்கு வரும் பக்தர்களுக்கு அங்குள்ள யானை லட்சுமி ஆசிர்வாதம் வழங்கும். அதன் பின்னர் காந்தி வீதி சிவன் கோயிலுக்கு யானை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தங்கவைக்கப்படும்.
இந்த நிலையில், யானை லட்சுமி சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், யானை கடந்த ஒரு மாதமாக சிவன் கோயிலிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளது.