கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள போகாடி ரிங் சாலையில் அமைந்துள்ள ஜிஎல்என் திருமண மண்டபத்தில் நாளை ரஷ்மி-நவீன் ஆகியோருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்திற்கு 108 கரோனா வாரியர்ஸுக்கு (கரோனா முன்களப் பணியாளர்கள்) அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இத்திருமணத்தில் கரோனா முன்களப் பணியாளர்கள்தான் முக்கிய விருந்தாளியாக அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், திருமணத்திற்கு முன்பு இவர்களது சேவைகளுக்காகப் பாராட்டப்படவுள்ளனர்.
15 தூய்மைப் பணியாளர்கள், 3 அங்கன்வாடி பணியாளர்கள், 6 ஆஷா தொழிலாளர்கள், 2 சுகாதார உதவியாளர்கள், 5 அஞ்சல் ஊழியர்கள், 11 செவிலியர்கள், 26 மருத்துவ ஊழியர்கள், 32 காவலர்கள், 11 ஊடக நபர்கள் எனத் திருமணத்திற்கு 108 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். நாளைய நிகழ்வுக்கு இந்த நபர்கள் முக்கிய விருந்தினர்கள் ஆவர்.