தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீர் மாநிலத்தில் ஆறு பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில் பதுங்கியிருந்த ஆறு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

By

Published : May 16, 2019, 11:33 PM IST

பாதுகாப்பு படையினர் வாகனம்


காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள தலிபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இதில் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவரும், உள்ளூர்வாசி ஒருவரும் உயிரிழந்தனர். இதே போன்று சோபியானில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் முயன்றபோது, துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details