தமிழ்நாடு

tamil nadu

உ.பி. சாலை விபத்து 6 பேர் உயிரிழப்பு; 10 பேர் படுகாயம்!

By

Published : Nov 2, 2020, 9:42 AM IST

லக்னோ: பஹ்ரைச் மாவட்டத்தில் சரக்கு வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர்.

6 killed many injured in road accident
6 killed many injured in road accident

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் இன்று (நவ.2) அதிகாலை, சரக்கு வாகனம் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சரக்கு வாகனத்தில் சென்றவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 10 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ளவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இதுகுறித்து அந்தப் பகுதி போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான அனைவரும் பக்கத்து மாவட்டமான லக்கிம்பூர் கெரியைச் சேர்ந்தவர்கள் என்பதும், கிச்சோச்சா தர்காவிலிருந்து திரும்பிச் செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:லாரியின் டீசல் டேங்கில் மீது கார் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details