மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
பிரதமரின் அறிவிப்பையடுத்து, மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத் படேல் இன்று வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களின் நூறு மீட்டர் எல்லைக்குள் ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.