கல்வான் பள்ளத்தாக்கில் அண்மையில் ஏற்பட்ட மோதலால் சீன ராணுவத்தால் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதில் சீன வீரர்கள் 30 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் எனத் தகவல் வெளியான நிலையில்கூட, வீரர்கள் இறப்பு குறித்து இதுவரை சீனா வாய் திறக்கவில்லை. இருந்தபோதிலும், தற்போதுவரை எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது.
இந்நிலையில் இந்திய ரிசர்வ் பட்டாலியனில் உள்ள சிக்கிம் காவல் படை இந்திய- சீன எல்லையில் பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிக்கிம் மண்டல காவல் துறை துணைத் தலைவர் (டிஐஜி) செய்தியாளர்களிடம் கூறுகையில், “எல்லையில் படைகளை நிறுத்திவைத்திருப்பது போருக்கான அறிகுறியல்ல, பாதுகாப்பிற்காக மட்டும்தான்.